ஏதோ ஒரு போக்கில் மனம்
மௌனம்
ஒரு சொல்லாய்
சிதறித் தெறிக்க
காத்திருக்கிறது
பயணங்களும்
பயணப்பட்டு கொண்டிருக்க
வேதங்களும்
அதன் ஞானநிலைகளும்
தன்மைகளின்றி தவிக்க
வாழ்க்கையின்
ஒப்பனைகள் சிக்கி சிக்கி
தவிக்க
மிச்சமின்றி ஏங்கும்
அன்பிற்கு
இரக்கம் இல்லை
எங்கிருந்தாலும் நினைவுகள்
என்றும் இனிமையான
தருணத்தை
சொல்லிவிட்டு செல்கிறது
Comments
Post a Comment