காதலின் பாஷை
அக்கரையோரைமாய் நின்றபோது
அவளின் ஈர நினைவு நினைவுக்கு
வந்தது
இந்த நினைவு
எனக்கு இன்றுவந்தது அன்று
காதலின் கோணங்கள்
மனதின் விடயங்களை விரியசெய்து
அதன் அறியாத
பாஷைகளையும் என்னிடம் விட்டு
தெறித்து ஓடியது
சில நேரம்
இந்த நுட்பத்திலும் நுட்பமான
தெளிவை நான் எங்கு கற்பது
வாசகன் நான்
நிதம் படிக்கும் புத்தகமாய் நீ
இந்த உறவு போதுமே
நீடிப்பதற்கு
Comments
Post a Comment